சிறுகதை


இரவு  சுமார் 9.30 மணி பிரபல எழுத்தாளர்  ஒருவரின் சிறுகதை தொகுப்பினை படித்துக்கொண்டிருந்தேன்,நான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னால் ஜன்னல் ,நன்றாக தென்றல் வீசிக்கொண்டிருந்தது,இரவின் அமைதியும் கதையினில் பயணமும் மிகவும் அழகாக இருந்தது. திடீரென்று ஒரு வெளிச்சம் வந்து சென்றது,பார்ப்பதற்கு ஒரு டார்ச் லைட் வெளிச்சம் போல் இருந்தது.அதன் பிறகு  சிறிது நேரத்திற்கு அது வரவில்லை,என்ன செய்துகொண்டிருந்தேன்,(பிரபல எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பு)

மீண்டும் சிறுது நேரத்திற்கு பின் அதே டார்ச் லைட் வெளிச்சம் போன்ற ஒன்று தோன்றியது,அது தன் ஒளிக்கீற்று பல்வேறு திசைகளில் பாய்ந்து சென்றது,
திடுக்கிட்டு வெளிச்சம் தோன்றியதற்கு எதிர்திசையை நோக்கினேன்(ஜன்னலை) யாரும் இல்லை எந்த ஒரு வெளிச்சமும் இல்லை,ஆனால் அந்த ஒளி வந்துகொண்டுதான் இருந்தது,ஒரு லேசான பயம்,உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்,சற்று நிதானித்து கொண்டு அறையை சுற்றிலும் பார்வையை செலுத்தினேன்,ஒளிக்கு உண்டான  காரணத்தை கண்டுபிடித்தேன்,மனம் அமைதி அடைந்தது.

அந்த ஒளி எங்கள் வீட்டில் இருந்த ஒரு லேமினேட் செய்யப்பட புகைப்படத்தின் மேலே லைட் வெளிச்சத்தின் பிரதிபலிப்பினால் (reflection) அந்த புகைப்படம் மின் விசிறியின் காத்திற்கு ஆடிய பொது ஏற்பட்டது.

சரி ஒரு எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் என்று கூறினேன் அல்லவா,

அந்த எழுத்தாளரின் பெயர் -சுஜாதா



நன்றி:ராமகிருஷ்ணன் 

ராமகிருஷ்ணன் பா 
12-06-2022

Comments